Skip to main content

Posts

Showing posts from March, 2023

மலைகிராமும் மின்சாரமும்

                              நான் சமூக பணி படித்து முடித்து ( 2019 ) தமிழக கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தில் சமூக நலவாழ்வு திட்டத்தில் சமூக பணியாளராக இணைந்தேன் . இந்த திட்டத்தில் நான் பணிசெய்ய வேண்டி இடங்கள் கருமாத்தூர், உசிலம்பட்டி , விக்கிரமங்கலம், முருகத்தூரான்பட்டி , தேனி மற்றும் வருசநாடு. ஒவ்வொரு இடங்களில் திட்டத்தின்   நலவாழ்வு பணியாளர் இருப்பார்கள் . நான் பணிக்கு சேர்ந்த உடன் நடத்திய முதல் நலவாழ்வு பணியாளர் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது , அதில் ஒரு பணியாளர் என்னிடம் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார் , அது என்னவென்றால் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பஞ்சாயத்துக்கு ( தாண்டிக்குடி செல்லும் வழி) உட்பட்ட பகுதியில் மின்சார   வசதி கிடைக்காமல்   வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்டார், அதனை கேட்டதும் ஒரு அதிர்ச்சி மேலும் அவர்களை பார்க்க வேண்டும் என ஆர்வத்தையும் தூண்டியது. நான் அந்த பணியாளரிடம் என்னால் முயன்ற முயற்சி எடுப்...

முதியவரின் வலிமையும் வலியும்

  15/06/2020 அன்று நான் கருமாத்தூரில்  பணி முடிந்து  ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் போது 95 வயது மதிக்கதக்க பாட்டி கையில் குச்சியை வைத்து நடக்க முடியாமல் நடந்து சென்றார். பின்பு வலிமையான சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அந்த சத்தம் என்னவென்று பார்தால் பாட்டி சலவை செய்யும் சத்தம். பின்பு அவரை பற்றி அருகில் விசாரித்தேன் அவர் பெயர் தங்கம்மாள் வயது 95 அவரது மகள் பாரமரிப்பில் இருக்கிறார். இந்த காணொளி மூலமாக World elder abuse awareness day-ல் முதியவர்களின் வலிமையும் வலியும் கடத்த முயல்கிறேன் தொடர்புக்கு   இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம் VRD 18 , பால் டிப்போ அருகில், தளவாய்புரம் பதிவு எண்: BK4/3/2023 வரிவிலக்கு: 12A/80G 7402335113/8838814481 rjpmchc@gmail.com

தானம்(Donation)

  நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் . என்னுடைய குடும்பத்தில் நாங்கள் நாள்வர் இருக்கிறோம் நான் என் அம்மா, அப்பா மற்றும் அண்ணன் இருக்கிறோம். என்னுடைய அப்பா வண்ணம் பூசும் தொழிலை செய்துவருகிறார். 2017 ஆம் ‌ஆண்டு நான் முதுநிலை பட்டப்படிப்பை தொடங்கிய வருடம் அது. அன்றுதான் என் அம்மா திராத காய்ச்சல்,உடல் சோர்வு, உடல் வீக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அம்மா அருகில் இருக்கும் சிறு சிறு மருத்துவமனைகளுக்கு சென்று சோதித்த பிறகு. இரத்த சோகை என்று அம்மாவிடம் கூறினார்கள். இப்படியாக இரண்டு மாதங்களாக பார்த்தபோது உடல் உபாதைகள் தீவிரம் அடைந்தது தவிர சரியாகவில்லை. இதனை அறிந்த என் அம்மா அவரின் நண்பரும் இணைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதித்த பிறகு அவர்கள் அம்மாவை மூன்று நாட்கள் உள்நோயாளியாக இருந்து உடலை சோதிக்க வேண்டும் என்று அம்மாவிடம் கூறினார்கள். இச்செய்தியை அம்மா எங்களிடம் கூறினார். நாங்களும் சாதாரண உடல் பிரச்சினை என்று நினைத்து கொண்டு இருந்தோம். மறுநாள் நானும் அம்மாவும் மருத்துவமனைக்கு சென்றோம். நான் பிறந்த நாள் முதல் என் அம்மா மருத்துவமனைக்...