Skip to main content

சிறுமியின் திறமையும் மனநிலையும் ( Street circus)

இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அதில் குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோவில் அருகே சர்க்கஸ் நிகழ்ச்சியை அரங்கேற்றி கொண்டு இருந்தனர். குறிப்பாக ஒரு சிறுமி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார். ஒவ்வொரு சர்க்கஸின் முடிவில் மக்கள் அனைவரும் சிறுமியின் திறமையை ( சர்க்கஸ்) பார்த்து வியந்து பாராட்டி சிறுமிக்கு பணமாகவும் திண்பண்டங்களையும் வழங்கினார்கள்.

ஒவ்வொரு சர்க்கஸின் முடிவில் சிறுமிக்கு பல்வேறு நபர்கள் நூறு மற்றும் இருநூறு ரூபாய் கொடுக்கும் போது சிறுமி எந்தவித மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை, பின்பு சிறுமி தன்னுடைய தாயிடம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு அருகில் இருக்கும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைக்கு சென்று விளையாட்டு பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக ஓடிவந்து அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார். இதே போல் ஒவ்வொரு முறையும் சிறுமி சர்க்கஸ் முடித்த பிறகு விளையாட்டு பொருட்களை வாங்கி கொண்டே இருந்தார். நானும் அந்த சிறுமியோடு பின் சென்று சிறுமிக்கு விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து நானும் மகிழ்ந்தேன். நான் சிறுமியிடம் சிறிது பேசி பார்த்த போது சிறுமி சென்னையில் வசிப்பதாகவும் மேலும் 5ம் வகுப்பு படிப்பதாகவும் கூறினார். நான் சிறுமியின் திறமையையும் மற்றும் சிறுமியின் மனநிலையையும் ஆவணப்படுத்த விரும்பினேன்

சிறுமிக்கு மக்கள் நிறைய பணத்தை கொடுத்த போதும் மகிழாத சிறுமி அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு விளையாட்டு பொருட்களை வாங்கியவுடன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார்.


தொடர்புக்கு

இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம்

VRD 18, பால் டிப்போ அருகில்

தளவாய்புரம்

பதிவு எண்: BK4/3/2023

வரி விலக்கு : 12A/80G

தொடர்புக்கு : 7402335113/8838814481









Comments

Popular posts from this blog

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டு வரப்பட்ட திட்டம். ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்(AB-PMJAY), மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் ( CMCHIS) ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது இத்திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (மே 2023) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். உயர் அறுவை சிகிச்சைகளான காது நுண் நரம்பியல் அறுவை சிகிச்சை( காக்ளியர் இம்ப்ளான்ட் ) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்ல...

மலைகிராமும் மின்சாரமும்

                              நான் சமூக பணி படித்து முடித்து ( 2019 ) தமிழக கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தில் சமூக நலவாழ்வு திட்டத்தில் சமூக பணியாளராக இணைந்தேன் . இந்த திட்டத்தில் நான் பணிசெய்ய வேண்டி இடங்கள் கருமாத்தூர், உசிலம்பட்டி , விக்கிரமங்கலம், முருகத்தூரான்பட்டி , தேனி மற்றும் வருசநாடு. ஒவ்வொரு இடங்களில் திட்டத்தின்   நலவாழ்வு பணியாளர் இருப்பார்கள் . நான் பணிக்கு சேர்ந்த உடன் நடத்திய முதல் நலவாழ்வு பணியாளர் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது , அதில் ஒரு பணியாளர் என்னிடம் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார் , அது என்னவென்றால் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பஞ்சாயத்துக்கு ( தாண்டிக்குடி செல்லும் வழி) உட்பட்ட பகுதியில் மின்சார   வசதி கிடைக்காமல்   வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்டார், அதனை கேட்டதும் ஒரு அதிர்ச்சி மேலும் அவர்களை பார்க்க வேண்டும் என ஆர்வத்தையும் தூண்டியது. நான் அந்த பணியாளரிடம் என்னால் முயன்ற முயற்சி எடுப்...

எளிய மனிதர்கள் - 1

கட்டிட வேலை செய்யும் முதியவர் ஒவ்வொரு முறையும் செங்கல்களை தன் தலைமேல் தூக்கி கொண்டு நடக்கும் போது அவருடைய காய்த்த கைகளும் தளர்ந்த கால்களும் செய்தி ஒன்றை கடத்துகிறது   எளிய மனிதர்களின்‌ வாழ்வாதாரம் உடல் உழைப்பு என்பதை உணர்த்துகிறது மேலும் உழைக்க தயங்கும் நமக்கு முதியவர் தன்னுடைய உழைப்பால் பாடத்தை கற்பிக்கின்றார் தொடர்புக்கு   இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம் தளவாய்புரம்  7402335113/8838814481