Skip to main content

Posts

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டு வரப்பட்ட திட்டம். ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்(AB-PMJAY), மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் ( CMCHIS) ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது இத்திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (மே 2023) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். உயர் அறுவை சிகிச்சைகளான காது நுண் நரம்பியல் அறுவை சிகிச்சை( காக்ளியர் இம்ப்ளான்ட் ) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்ல...
Recent posts

எளிய மனிதர்கள் - 1

கட்டிட வேலை செய்யும் முதியவர் ஒவ்வொரு முறையும் செங்கல்களை தன் தலைமேல் தூக்கி கொண்டு நடக்கும் போது அவருடைய காய்த்த கைகளும் தளர்ந்த கால்களும் செய்தி ஒன்றை கடத்துகிறது   எளிய மனிதர்களின்‌ வாழ்வாதாரம் உடல் உழைப்பு என்பதை உணர்த்துகிறது மேலும் உழைக்க தயங்கும் நமக்கு முதியவர் தன்னுடைய உழைப்பால் பாடத்தை கற்பிக்கின்றார் தொடர்புக்கு   இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம் தளவாய்புரம்  7402335113/8838814481

சிறுமியின் திறமையும் மனநிலையும் ( Street circus)

இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அதில் குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோவில் அருகே சர்க்கஸ் நிகழ்ச்சியை அரங்கேற்றி கொண்டு இருந்தனர். குறிப்பாக ஒரு சிறுமி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார். ஒவ்வொரு சர்க்கஸின் முடிவில் மக்கள் அனைவரும் சிறுமியின் திறமையை ( சர்க்கஸ்) பார்த்து வியந்து பாராட்டி சிறுமிக்கு பணமாகவும் திண்பண்டங்களையும் வழங்கினார்கள். ஒவ்வொரு சர்க்கஸின் முடிவில் சிறுமிக்கு பல்வேறு நபர்கள் நூறு மற்றும் இருநூறு ரூபாய் கொடுக்கும் போது சிறுமி எந்தவித மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை, பின்பு சிறுமி தன்னுடைய தாயிடம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு அருகில் இருக்கும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைக்கு சென்று விளையாட்டு பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக ஓடிவந்து அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார். இதே போல் ஒவ்வொரு முறையும் சிறுமி சர்க்கஸ் முடித்த பிறகு விளையாட்டு பொருட்களை வாங்கி கொண்டே இருந்தார். நானும் அந்த சிறுமியோடு பின் சென்று சிறுமிக்கு...

மலைகிராமும் மின்சாரமும்

                              நான் சமூக பணி படித்து முடித்து ( 2019 ) தமிழக கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தில் சமூக நலவாழ்வு திட்டத்தில் சமூக பணியாளராக இணைந்தேன் . இந்த திட்டத்தில் நான் பணிசெய்ய வேண்டி இடங்கள் கருமாத்தூர், உசிலம்பட்டி , விக்கிரமங்கலம், முருகத்தூரான்பட்டி , தேனி மற்றும் வருசநாடு. ஒவ்வொரு இடங்களில் திட்டத்தின்   நலவாழ்வு பணியாளர் இருப்பார்கள் . நான் பணிக்கு சேர்ந்த உடன் நடத்திய முதல் நலவாழ்வு பணியாளர் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது , அதில் ஒரு பணியாளர் என்னிடம் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார் , அது என்னவென்றால் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பஞ்சாயத்துக்கு ( தாண்டிக்குடி செல்லும் வழி) உட்பட்ட பகுதியில் மின்சார   வசதி கிடைக்காமல்   வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்டார், அதனை கேட்டதும் ஒரு அதிர்ச்சி மேலும் அவர்களை பார்க்க வேண்டும் என ஆர்வத்தையும் தூண்டியது. நான் அந்த பணியாளரிடம் என்னால் முயன்ற முயற்சி எடுப்...

முதியவரின் வலிமையும் வலியும்

  15/06/2020 அன்று நான் கருமாத்தூரில்  பணி முடிந்து  ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் போது 95 வயது மதிக்கதக்க பாட்டி கையில் குச்சியை வைத்து நடக்க முடியாமல் நடந்து சென்றார். பின்பு வலிமையான சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அந்த சத்தம் என்னவென்று பார்தால் பாட்டி சலவை செய்யும் சத்தம். பின்பு அவரை பற்றி அருகில் விசாரித்தேன் அவர் பெயர் தங்கம்மாள் வயது 95 அவரது மகள் பாரமரிப்பில் இருக்கிறார். இந்த காணொளி மூலமாக World elder abuse awareness day-ல் முதியவர்களின் வலிமையும் வலியும் கடத்த முயல்கிறேன் தொடர்புக்கு   இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம் VRD 18 , பால் டிப்போ அருகில், தளவாய்புரம் பதிவு எண்: BK4/3/2023 வரிவிலக்கு: 12A/80G 7402335113/8838814481 rjpmchc@gmail.com

தானம்(Donation)

  நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் . என்னுடைய குடும்பத்தில் நாங்கள் நாள்வர் இருக்கிறோம் நான் என் அம்மா, அப்பா மற்றும் அண்ணன் இருக்கிறோம். என்னுடைய அப்பா வண்ணம் பூசும் தொழிலை செய்துவருகிறார். 2017 ஆம் ‌ஆண்டு நான் முதுநிலை பட்டப்படிப்பை தொடங்கிய வருடம் அது. அன்றுதான் என் அம்மா திராத காய்ச்சல்,உடல் சோர்வு, உடல் வீக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அம்மா அருகில் இருக்கும் சிறு சிறு மருத்துவமனைகளுக்கு சென்று சோதித்த பிறகு. இரத்த சோகை என்று அம்மாவிடம் கூறினார்கள். இப்படியாக இரண்டு மாதங்களாக பார்த்தபோது உடல் உபாதைகள் தீவிரம் அடைந்தது தவிர சரியாகவில்லை. இதனை அறிந்த என் அம்மா அவரின் நண்பரும் இணைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதித்த பிறகு அவர்கள் அம்மாவை மூன்று நாட்கள் உள்நோயாளியாக இருந்து உடலை சோதிக்க வேண்டும் என்று அம்மாவிடம் கூறினார்கள். இச்செய்தியை அம்மா எங்களிடம் கூறினார். நாங்களும் சாதாரண உடல் பிரச்சினை என்று நினைத்து கொண்டு இருந்தோம். மறுநாள் நானும் அம்மாவும் மருத்துவமனைக்கு சென்றோம். நான் பிறந்த நாள் முதல் என் அம்மா மருத்துவமனைக்...